என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்1 Nov 2019 11:32 AM GMT (Updated: 1 Nov 2019 11:32 AM GMT)
குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் சுபேதா நகரை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 37), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் தரணம்பேட்டையை சேர்ந்த ரிஸ்வான் (வயது 35), ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டிய சிலர் அலாவுதீனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அலாவுதீன் ரிஸ்வானுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அலாவுதீன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மோர்தானா அணைக்கு சென்றார். அங்கு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்தநிலையில் இன்று காலை அணையில்அலாவுதீன் பிணமாக மிதந்தார். குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் சுபேதா நகரை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 37), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் தரணம்பேட்டையை சேர்ந்த ரிஸ்வான் (வயது 35), ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டிய சிலர் அலாவுதீனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அலாவுதீன் ரிஸ்வானுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அலாவுதீன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மோர்தானா அணைக்கு சென்றார். அங்கு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்தநிலையில் இன்று காலை அணையில்அலாவுதீன் பிணமாக மிதந்தார். குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X