என் மலர்
செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்
அரியலூரில் கடந்த ஒரு ஆண்டாக விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அரியலூர்:
அரியலூர் கல்லாலங்குடி சாலையில் அரசு சிமெண்ட் ஆலை 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அரசு ரூ.809 கோடி மதிப்பில் 3ஆயிரம் டன் சிமெண்ட உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கும் செய்யும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் அதனை பயன்பாட்டிற்காக நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு தலைமைகொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சிமெண்ட் ஆலை ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
அரியலூர் கல்லாலங்குடி சாலையில் அரசு சிமெண்ட் ஆலை 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அரசு ரூ.809 கோடி மதிப்பில் 3ஆயிரம் டன் சிமெண்ட உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கும் செய்யும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் அதனை பயன்பாட்டிற்காக நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு தலைமைகொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சிமெண்ட் ஆலை ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story






