என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை- சோளிங்கரில் 138 மி.மீ கொட்டியது
Byமாலை மலர்30 Oct 2019 9:49 AM GMT (Updated: 30 Oct 2019 9:49 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2 வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான சாரல் மழையாக தொடங்கிய நிலையில் திடீரென வலுப்பெற்று பலத்த மழையாக மாறியது.
காலை 6 மணி முதல் மதியம் ஒருமணி வரை விட்டு விட்டு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது.
மேலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவிலும் வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சோளிங்கர், அம்முண்டி பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மில்லி மீட்டர் மழை, பொன்னையில் 91.8 மில்லிமீட்டர்மழையும், காவேரிப்பாக்கத்தில் 68.2 மில்லி மீட்டர் பதிவானது.
வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், அணைக்கட்டு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்தார்.
தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணியம்பாடி, அணைக்கட்டு, லத்தேரி பகுதிகளில் விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான சாரல் மழையாக தொடங்கிய நிலையில் திடீரென வலுப்பெற்று பலத்த மழையாக மாறியது.
காலை 6 மணி முதல் மதியம் ஒருமணி வரை விட்டு விட்டு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது.
மேலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவிலும் வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சோளிங்கர், அம்முண்டி பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மில்லி மீட்டர் மழை, பொன்னையில் 91.8 மில்லிமீட்டர்மழையும், காவேரிப்பாக்கத்தில் 68.2 மில்லி மீட்டர் பதிவானது.
வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், அணைக்கட்டு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்தார்.
தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணியம்பாடி, அணைக்கட்டு, லத்தேரி பகுதிகளில் விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X