என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு
Byமாலை மலர்23 Oct 2019 6:22 PM GMT (Updated: 23 Oct 2019 6:22 PM GMT)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். வரா கடன்களை வசூல் செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்த கூடாது. வைப்பு தொகை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்.
வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 150 வங்கிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி வங்கியின் மாநில தலைவர் ராமதுரை, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராதாகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் சிங்கமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். வரா கடன்களை வசூல் செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்த கூடாது. வைப்பு தொகை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்.
வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 150 வங்கிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி வங்கியின் மாநில தலைவர் ராமதுரை, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராதாகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் சிங்கமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X