என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூரில் இன்று காலை 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்
Byமாலை மலர்22 Oct 2019 9:49 AM GMT (Updated: 22 Oct 2019 9:49 AM GMT)
குன்னூரில் இன்று காலை லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதி 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது. பஸ்சில் சிக்கி தவித்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குன்னூர்:
மதுரையில் இருந்து ஊட்டிக்கு 25 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள காட்டேரி பூங்கா அருகே ஒரு வளைவில் அந்த பஸ் வந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.
லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதியது. சுவர் இடிந்து 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 20 அடி பள்ளத்தில் சிக்கி தவித்த 25 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு 25 பேரையும் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது தவிர இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
மதுரையில் இருந்து ஊட்டிக்கு 25 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள காட்டேரி பூங்கா அருகே ஒரு வளைவில் அந்த பஸ் வந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.
லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதியது. சுவர் இடிந்து 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 20 அடி பள்ளத்தில் சிக்கி தவித்த 25 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு 25 பேரையும் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது தவிர இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X