என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் அருகே பள்ளி பஸ் கவிழ்ந்து 7 மாணவர்கள் காயம்
Byமாலை மலர்19 Oct 2019 11:30 AM GMT (Updated: 19 Oct 2019 11:30 AM GMT)
அரக்கோணம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளிக்கு சொந்தமான பஸ் இன்று காலை தண்டலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்தது. அங்குள்ள மெயின் ரோட்டில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த மாணவர்களுக்கு அடிபட்டது. அவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனை கண்ட பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பஸ்சில் வந்த மாணவர்கள் தண்டலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (14), கிஷோர் (10), இமாலயன் (10), தீபக் (9), புவனா (9), முகேஷ் (14), ரேணுகோபால் (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாசில்தார் ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளிக்கு சொந்தமான பஸ் இன்று காலை தண்டலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்தது. அங்குள்ள மெயின் ரோட்டில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த மாணவர்களுக்கு அடிபட்டது. அவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனை கண்ட பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பஸ்சில் வந்த மாணவர்கள் தண்டலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (14), கிஷோர் (10), இமாலயன் (10), தீபக் (9), புவனா (9), முகேஷ் (14), ரேணுகோபால் (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாசில்தார் ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X