search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 97 அடியாக உயர்வு

    பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் உயர்ந்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகமாக வருகிறது. நீர் பகுதியான நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. இன்று 9 மணி நிலவரப்படி நீர்மட்டம் 97 அடியை தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×