என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே பைக் விபத்தில் டாக்டர் பலி
Byமாலை மலர்3 Oct 2019 11:54 AM GMT (Updated: 3 Oct 2019 11:54 AM GMT)
ஆம்பூர் அருகே இன்று காலை சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நர்சு படுகாயம் அடைந்தார்.
ஆம்பூர்:
நாகர்கோவிலை சேர்ந்த சிங் என்பவருடைய மகன் பெனடிக் (வயது 27). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்ஸ் ஒருவருடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி சென்றார்.
வெங்கிலி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே டாக்டர் பெனடிக் பரிதாபமாக இறந்தார்.
நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் விபத்தில் பலியான சம்பவம் வேலூர் தனியார் ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X