என் மலர்
செய்திகள்

திருட்டு
மொடக்குறிச்சியில் நள்ளிரவில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி
மொடக்குறிச்சியில் நள்ளிரவில் 2 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று இரவு தங்கவேலும் அவரது மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் மர்ம ஆசாமி நுழைந்தான்.
திடீரென கதவை உடைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தங்கவேலு லைட்டைப் போட்டார். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம ஆசாமி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி விட்டான்.
இதேபோன்று அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்த ஒரு வீட்டிலும் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் திருட முயற்சி செய்துள்ளான். அங்கும் அவனது முயற்சி எடுப்படாததால் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று இரவு தங்கவேலும் அவரது மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் மர்ம ஆசாமி நுழைந்தான்.
திடீரென கதவை உடைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தங்கவேலு லைட்டைப் போட்டார். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம ஆசாமி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி விட்டான்.
இதேபோன்று அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்த ஒரு வீட்டிலும் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் திருட முயற்சி செய்துள்ளான். அங்கும் அவனது முயற்சி எடுப்படாததால் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story






