என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்கம் உள்ளதா? அரசு தலைமை கொறடா ஆய்வு
Byமாலை மலர்21 Sep 2019 6:15 PM GMT (Updated: 21 Sep 2019 6:15 PM GMT)
விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், ஒட்டக்கோவில் மற்றும் ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அரசு கொறடா கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்காச்சோளத்தில் ராணுவப் படைப்புழு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தடுக்க படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 653 எக்டர் பரப்பளவிற்கு மக்காச் சோளத்தில் ராணுவ படைப்புழுவின் தாக்குதலினால் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக 16 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.8 கோடியே 54 லட்சம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்புழுவின் தாக்குதல் நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இணை இயக்குனர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (வேளாண்மை) பழனிசாமி மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலார் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், ஒட்டக்கோவில் மற்றும் ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அரசு கொறடா கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்காச்சோளத்தில் ராணுவப் படைப்புழு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தடுக்க படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 653 எக்டர் பரப்பளவிற்கு மக்காச் சோளத்தில் ராணுவ படைப்புழுவின் தாக்குதலினால் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக 16 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.8 கோடியே 54 லட்சம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்புழுவின் தாக்குதல் நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இணை இயக்குனர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (வேளாண்மை) பழனிசாமி மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலார் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X