என் மலர்
செய்திகள்

கைது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் 5 பெண்களிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது
ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11½ பவுன் நகைள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:
காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடிப்பதாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு புகார் சென்றது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அவரது உத்தரவின் பேரில் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், ஏட்டு சுப்பிரமணி மற்றும் போலீஸ்காரர்கள் மதன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி முல்லைநகர் காலனியை சேர்ந்த வசந்தகுமார் (வயது38) என்பதும், ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
வசந்தகுமார் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் ரெயிலில் ஏறி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த பயணிகளின் நகைகளை திருடி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாதவி (40), பிந்து(35), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி(32), கோவையை சேர்ந்த விஜயா(53), பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரிடம் வெவ்வேறு நாட்களில் நகைகளை திருடி உள்ளார். அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளோம் என்றனர்.
காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடிப்பதாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு புகார் சென்றது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அவரது உத்தரவின் பேரில் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், ஏட்டு சுப்பிரமணி மற்றும் போலீஸ்காரர்கள் மதன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி முல்லைநகர் காலனியை சேர்ந்த வசந்தகுமார் (வயது38) என்பதும், ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
வசந்தகுமார் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் ரெயிலில் ஏறி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த பயணிகளின் நகைகளை திருடி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாதவி (40), பிந்து(35), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி(32), கோவையை சேர்ந்த விஜயா(53), பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரிடம் வெவ்வேறு நாட்களில் நகைகளை திருடி உள்ளார். அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளோம் என்றனர்.
Next Story






