என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை உல்லாசத்தில் ஈடுபட வைத்த மூதாட்டி கைது
Byமாலை மலர்20 Sep 2019 5:43 AM GMT (Updated: 20 Sep 2019 5:43 AM GMT)
ஈரோட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை உல்லாசத்தில் ஈடுபட வைத்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). வாட்டர் பில்டர் சர்வீஸ் ஊழியர் ஆவார்.
இவரிடம் ஈரோடு சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சரோஜா (72) என்ற பெண் ‘‘தனது வீட்டுக்கு வாட்டர் பில்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் வாருங்கள்’’ என அழைத்தார்.
அதன் படி சசிகுமாரும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் இருந்தனர்.
அப்போது சசிகுமாரிடம் வந்த சரோஜா ‘‘என் வீட்டில் 2 பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உல்லாசமாக ஜாலியாக இருக்கலாம். அதற்கு ரூ.1,000 கொடுத்தால் போதும்’’ என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகுமார் ‘‘என்னிடம் இப்போது பணம் இல்லை. வெளியே போய் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன்’’ என்று கூறினார்.
அப்போது அவர் வீட்டில் இருந்த 2 பெண்களிடம் பேசினார். அப்போது அந்த பெண்கள் ‘‘நாங்கள் அப்படிப்பட்ட பெண்கள் இல்லை. இந்தம்மா (சரோஜா) எங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துகிறார். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்கள். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் எடுத்து வருவதாக கூறி உள்ளேன். வெளியே சென்று உங்களை மீட்கிறேன் என்று கூறியபடி வெளியே சென்ற சசிகுமார் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். பிறகு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய சரோஜாவை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 2 பெண்களும் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). வாட்டர் பில்டர் சர்வீஸ் ஊழியர் ஆவார்.
இவரிடம் ஈரோடு சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சரோஜா (72) என்ற பெண் ‘‘தனது வீட்டுக்கு வாட்டர் பில்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் வாருங்கள்’’ என அழைத்தார்.
அதன் படி சசிகுமாரும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் இருந்தனர்.
அப்போது சசிகுமாரிடம் வந்த சரோஜா ‘‘என் வீட்டில் 2 பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உல்லாசமாக ஜாலியாக இருக்கலாம். அதற்கு ரூ.1,000 கொடுத்தால் போதும்’’ என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகுமார் ‘‘என்னிடம் இப்போது பணம் இல்லை. வெளியே போய் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன்’’ என்று கூறினார்.
அப்போது அவர் வீட்டில் இருந்த 2 பெண்களிடம் பேசினார். அப்போது அந்த பெண்கள் ‘‘நாங்கள் அப்படிப்பட்ட பெண்கள் இல்லை. இந்தம்மா (சரோஜா) எங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துகிறார். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்கள். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் எடுத்து வருவதாக கூறி உள்ளேன். வெளியே சென்று உங்களை மீட்கிறேன் என்று கூறியபடி வெளியே சென்ற சசிகுமார் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். பிறகு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய சரோஜாவை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 2 பெண்களும் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X