என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரத்தில் ஓட்டல்களில் பயன்படுத்திய வீட்டு சிலிண்டர்கள் பறிமுதல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி தனி தாசில்தார் பிரியா தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் உள்ள டீ கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் மானிய விலை சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் சந்தவெளியம்மன் கோயில் தெரு, கைலாசநாதர் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த தலா 300 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அதனை காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.






