search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகை திருட்டு
    X
    தங்க நகை திருட்டு

    அரியலூர் அருகே மூதாட்டியிடம் நகைகள் பறிப்பு

    அரியலூர் அருகே மூதாட்டியிடம் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றது தொர்பாக போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருன்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், காவனூர் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி காந்தி(வயது 60). இவர் நேற்று முன்தினம் நாச்சியார்பேட்டை தைலமர காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், காந்தியின் கழுத்தில் கிடந்த தாலி, தோடு உள்ளிட்ட 1 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலரழகன் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×