என் மலர்
செய்திகள்

கைது
போலி மதுபான ஆலை நடத்திய 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்தி வந்த 8 பேரை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை செய்யப்பட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னம்பட்டி அர்த் தனாரி, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், குமார், ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார், பவானி ராஜேஷ், சரவணகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன சந்திரம் மாதேஸ்வரன், ஜெகதீசன் ஆகிய 8 பேரும் மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மீதும் ரேசன் அரிசி கடத்தியது, போலி மதுபானங்கள் தயாரித்தது உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கதிரவனுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை செய்யப்பட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னம்பட்டி அர்த் தனாரி, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், குமார், ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார், பவானி ராஜேஷ், சரவணகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன சந்திரம் மாதேஸ்வரன், ஜெகதீசன் ஆகிய 8 பேரும் மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மீதும் ரேசன் அரிசி கடத்தியது, போலி மதுபானங்கள் தயாரித்தது உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கதிரவனுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
Next Story






