என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்22 July 2019 5:57 PM GMT (Updated: 22 July 2019 5:57 PM GMT)
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் மருத்துவம், பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 34 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார். இதில் சுகாதார ஆய்வாளர் குமார், ராமமூர்த்தி, அருள் பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு காது, மூக்கு, தொண்டை நோய்கள், கண் மருத்துவம், பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 34 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார். இதில் சுகாதார ஆய்வாளர் குமார், ராமமூர்த்தி, அருள் பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X