search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கிய போது எடுத்த படம்.

    அரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

    அரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டிராதித்தம் கிராமத்தில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு அரியலூர் தொகுதி செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி, காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கண்டிராதித்தம் மற்றும் மேட்டுதெரு ஆகிய இரு கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு- புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கி, காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜரின் வாழ்க்கை குறிப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவும், தேசிய இளைஞர் திறன் நாள் விழாவும் கொண்டாப்பட்டது. விழாவிற்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்.ஆர்.கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரஜாமணிக்கம் கலந்து கொண்டு, காமராஜரை பற்றி பேசினார். தொடர்ந்து பள்ளியில் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது. மேலும் காமராஜர் பற்றி சிறப்பாக பேசிய மாணவிகளுக்கு பரிசுவழங்கப்பட்டது. முடிவில் தேசிய இளைஞர் திறன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வட்டார தலைவர் குடியரசு தலைமை தாங்கி, காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிராம கமிட்டி துணை தலைவர்கள் தண்டபாணி, கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×