என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

சந்திரயான்-2 விண்கலத்தை செப்டம்பர் மாதம் அனுப்ப முடிவு

சென்னை:
நிலவில் தண்ணீர் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? என்பதை கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியில் முதலில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. பிறகு அந்த போட்டியில் சீனாவும் சேர்ந்து கொண்டது.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த போட்டியில் இந்தியாவும் குதித்தது. 2008-ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்தியா ஏவியது. அது வெற்றிகரமாக தனது ஆய்வுப் பணியைச் செய்தது.
நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திரயான்-1 உறுதி செய்தது. இது தொடர்பாக சந்திரயான்-1 அனுப்பிய முப்பரிமாண புகைப்படங்கள் அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகள் நடத்திய ஆய்வையும் விட துல்லியமாக இருப்பதை காட்டின. இதை அடிப்படையாகக் கொண்டு நிலவில் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள “சந்திரயான்-2” என்ற விண்கலத்தை இந்தியாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் செய்தனர்.
சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 நிலவில் தரை இறக்கும் லேண்டர் கருவியில் மாற்றம் செய்யப்பட்டதால் 4 தடவை சந்திரயான்-2 விண்ணில் ஏவுவது தள்ளிப் போனது. 5-வது முயற்சியாக ஜூலை 15-ந்தேதி (இன்று) சந்திரயான்-2 விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
3.8 டன் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை 640 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-மிமிமி ராக்கெட் மூலம் ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 15 மாடிகள் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் செல்லமாக “பாகுபலி” என்று அழைக்கின்றனர். இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.978 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு பயண திட்டத்தை காண ஸ்ரீஹரி கோட்டாவில் சுமார் 5 ஆயிரம் பேர் குவிந்திருந்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் சந்திரயான்-2 பறப்பதை நேரில் பார்க்க வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு பிஎஸ்.எல்.வி. மார்க்-மிமிமி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. கிரையோஜெனிக் எந்திரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது மிக நுணுக்கமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதை சரி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் செய்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
சற்று தாமதமாக அல்லது நாளை சந்திரயானை விண்ணில் ஏவும் வகையில் நேரத்தை மாற்றலாமா? என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் தேவைப்படலாம் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சந்திரயான்-2 பயண திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இதனால் சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை திட்டமிட்டப்படி விண்ணில் பறக்கவில்லை. நிலவுக்கு செலுத்தப்பட இருந்த 2.51 மணிக்கு சுமார் 56 நிமிடங்களுக்கு முன்னதாக சந்திரயான்-2 பயணம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.
சந்திரயான்-2 விண்கலம் மீண்டும் விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் விண்ணில் ஏவும் தேதியை நிர்ணயம் செய்ய இன்னும் 10 நாட்களாகும் என்று தெரிகிறது. சந்திரயான்-2 விண்கலம் ஏவும் பணி 1.55 மணிக்கு நிறுத்தப் பட்டபோது சிறிது நேரம் குழப்பம் நிலவியதாக கூறப்படுகிறது.
சந்திரயான்-2 விண்கலம் தொடர்பான எந்த கருவிகளிலும் பழுது ஏற்படவில்லை. அவற்றை சுமந்து செல்லும் பி.எஸ். எல்.வி. மார்க்-மிமிமி ராக்கெட்டில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராக்கெட்டில் உள்ள எரிபொருட்கள் அனைத்தும் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே அடுத்த இரு வாரங்களுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இயலாது.
ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். ஜூலை 15, 16-ந் தேதிகளில் அல்லது சந்திரயானை ஜூலை 29, 30-ந்தேதிகளில் விண்ணில் செலுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜூலை 29, 30-ந்தேதிக்குள் தொழில் நுட்ப கோளாறுக்கான காரணத்தை கண்டுபிடித்து எரி பொருளை நிரப்பி பறக்க விட இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இனி செப்டம்பர் மாதம்தான் சந்திரயான் விண்ணில் ஏவப்படும் என்று தெரிகிறது.
உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்த சந்திரயான்-2 பயண திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் இஸ்ரோ நிகழ்த்த இருந்த சில சாதனைகள் கை நழுவிப் போனது. இன்றைய தினம் (ஜூலை 15) அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்த 50-வது ஆண்டு தினமாகும். அந்த நாளில் நிலவுக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புறப்படுவது முக்கியமானதாக கருதப்பட்டது. அந்த அரிய சாதனை கை நழுவிப் போனது.
சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் பகுதியில் செப்டம்பர் 7-ந்தேதி தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதுவரை நிலவை ஆராய்ச்சி செய்துள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகள் நிலவின் தென் பகுதிகளில் தங்கள் விண்கலங்களை தரை இறக்கியது இல்லை. அந்த சாதனையையும் சந்திரயான்-2 செய்ய இருந்தது. அந்த சாதனையும் தாமதமாகி உள்ளது.
செப்டம்பர் மாதம் சந்திரயானை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணிகளைத் தொடங்கினாலும் அதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. நிலவின் தெற்கு பகுதியில் நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் சமயத்தில் சந்திரயான்-2வை தரை இறங்க செய்ய வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.
குறிப்பிட்ட கால அளவில் விண்ணில் செலுத்தப்பட்டால்தான் நிலவின் தென் பகுதியை திட்டமிட்டப்படி சந்திரயான்-2 சென்று சேர முடியும். அதற்கு இன்னும் 7 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று ஒருதகவல் வெளியாகியுள்ளது. இதனால் சந்திரயான்-2 பயணத்தில் அடுத்த விண்ணில் ஏவும் அறிவிப்பு எப்போது முடிவாகும் என்பது இன்னும் 10 நாட்கள் கழித்தே உறுதியாக தெரிய வரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
