என் மலர்
செய்திகள்

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் போலீஸ் தர்ணா
வேலூர்:
வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 196 பெண் போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு பயிற்சி பெருபவர்களுக்கு 1 அறையில் 3 பேர் வீதம் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் போலீஸ் தங்கி உள்ள அறையில் சக போலீசாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக போலீசார் ஒன்று சேர்ந்து பிரீத்தியை தாக்கியதாக கூறபடுகிறது.
இது குறித்து பிரீத்தி பயிற்சி பள்ளி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதனால் பிரீத்தி இன்று பயிற்சி பள்ளி வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த பயிற்சி பள்ளி உயர் அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
பெண் போலீஸ் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






