என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
Byமாலை மலர்25 Jun 2019 5:59 PM GMT (Updated: 25 Jun 2019 5:59 PM GMT)
கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் கலெக்டர் அன்புசெல்வன் சென்னையில் பணிபுரிந்தபோது கொடிநாள் வசூலில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்ததை பாராட்டி தமிழக கவர்னரால் வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
இது தவிர சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் கலெக்டர் அன்புசெல்வன் சென்னையில் பணிபுரிந்தபோது கொடிநாள் வசூலில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்ததை பாராட்டி தமிழக கவர்னரால் வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
இது தவிர சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X