என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் கோவில் குளத்தில் ஐம்பொன் சிலை மீட்பு
Byமாலை மலர்20 Jun 2019 9:23 AM GMT (Updated: 20 Jun 2019 9:23 AM GMT)
காஞ்சிபுரம் கோவில் குளத்தில் மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக் குளம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது.
எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளம் தற்போது கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது.
இதையடுத்து வறண்ட குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை கிடந்ததை கண்டு பிடித்தனர்.
இதுபற்றி பெரிய காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். அது பெருமாள் சிலை என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரகோட்டம் கோவிலில் இருந்து கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை ஒன்று காணாமல் போனது.
விசாரணையில் அந்த சிலையை கோவிலின் அர்ச்சகர் கார்த்திக் என்பவர் சர்வ தீர்த்த குளத்தில் வீசியதாகத் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் திருக்குளத்தில் தேடிய போதும் அந்த சிலை சிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது குளத்தில் இருந்து பெருமாள் சிலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக் குளம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது.
எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளம் தற்போது கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது.
இதையடுத்து வறண்ட குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை கிடந்ததை கண்டு பிடித்தனர்.
இதுபற்றி பெரிய காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். அது பெருமாள் சிலை என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரகோட்டம் கோவிலில் இருந்து கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை ஒன்று காணாமல் போனது.
விசாரணையில் அந்த சிலையை கோவிலின் அர்ச்சகர் கார்த்திக் என்பவர் சர்வ தீர்த்த குளத்தில் வீசியதாகத் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் திருக்குளத்தில் தேடிய போதும் அந்த சிலை சிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது குளத்தில் இருந்து பெருமாள் சிலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X