என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்ட அரசு விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
Byமாலை மலர்15 Jun 2019 10:17 AM GMT (Updated: 15 Jun 2019 10:17 AM GMT)
ஈரோடு மாவட்ட அரசு விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறு பான்மையினர் மாணவ- மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர் விடுதிகள் 16, மாணவிகள் விடுதிகள் 13, கல்லூரி மாணவர் விடுதிகள் 2, மாணவிகள் விடுதி 2 உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் ஐடிஐ-யில் படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
அனைத்து மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழி காட்டி வழங்கப்படும். மலைப்பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
பெற்றோர்- பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதி உடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்- அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
எனவே விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் சலுகைகளை பெற்று, பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறு பான்மையினர் மாணவ- மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர் விடுதிகள் 16, மாணவிகள் விடுதிகள் 13, கல்லூரி மாணவர் விடுதிகள் 2, மாணவிகள் விடுதி 2 உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் ஐடிஐ-யில் படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
அனைத்து மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழி காட்டி வழங்கப்படும். மலைப்பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
பெற்றோர்- பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதி உடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்- அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
எனவே விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் சலுகைகளை பெற்று, பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X