என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கணவர் கைது
Byமாலை மலர்13 Jun 2019 3:12 PM GMT (Updated: 13 Jun 2019 3:12 PM GMT)
கறம்பக்குடி அருகே மனைவியின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 40). இவரது மனைவி சுகுமாரி (32). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுகுமாரி கறம்பக்குடியில் உள்ள அவரது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் கலியமூர்த்தி திடீரென மோட்டார் சைக்கிளில் தீ வைத்து விட்டு சென்று விட்டார். இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து சுகுமாரி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலியமூர்த்தியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X