என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்21 May 2019 11:31 AM GMT (Updated: 21 May 2019 11:31 AM GMT)
மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). இவரது நண்பர் குன்னூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (17). இருவரும் கூலி தொழிலாளிகள்.
பாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தவணை முறையில் பைக் வாங்கியிருந்தார்.
இதற்கான பணத்தை செலுத்துவதற்காக பாலகிருஷ்ணன் தனது நண்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டார்.
அங்கு தவணை தொகையினை செலுத்திவிட்டு இருவரும் மீண்டும் வீடு திரும்பினர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்,கிருஷ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த பால கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). இவரது நண்பர் குன்னூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (17). இருவரும் கூலி தொழிலாளிகள்.
பாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தவணை முறையில் பைக் வாங்கியிருந்தார்.
இதற்கான பணத்தை செலுத்துவதற்காக பாலகிருஷ்ணன் தனது நண்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டார்.
அங்கு தவணை தொகையினை செலுத்திவிட்டு இருவரும் மீண்டும் வீடு திரும்பினர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்,கிருஷ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த பால கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X