என் மலர்
செய்திகள்

தேசிய டெங்கு ஒழிப்பு தினம்
திருமயம் ஒன்றியம், பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வி.லெட்சுமிபுரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது.
திருமயம்:
திருமயம் ஒன்றியம், பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வி.லெட்சுமிபுரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. இதற்கு மனோஜ் தலைமை தாங்கினார். பனையப்பட்டி மருத்துவ அலுவலர் நிர்மலாவதனம் முன்னிலை வகித்தார். இதில் முதுநிலை சுகாதார ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது. இதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் வடிவேலு நன்றி கூறினார்.
இதேபோல் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமராஜ், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருமயம் ஒன்றியம், பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வி.லெட்சுமிபுரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. இதற்கு மனோஜ் தலைமை தாங்கினார். பனையப்பட்டி மருத்துவ அலுவலர் நிர்மலாவதனம் முன்னிலை வகித்தார். இதில் முதுநிலை சுகாதார ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது. இதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் வடிவேலு நன்றி கூறினார்.
இதேபோல் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமராஜ், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Next Story






