என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை?- மன்னார்குடி ஜீயர் கேள்வி
Byமாலை மலர்18 May 2019 7:10 AM GMT (Updated: 18 May 2019 7:10 AM GMT)
இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை? மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னார்குடி:
மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய தேச தலைவர்கள் 2 பேரும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். காந்தி அகிம்சை வழியை கையாண்டார். சுபாஷ் சந்திரபோஷ் ஆயுதம் ஏந்தினார். இதனால் சுபாஷ் சந்திரபோசை தேசவிரோதி என்று சொல்லி விட முடியுமா?. கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்னதால் தான், நான் கோட்சே தேசபக்தர் என்று கூறினேன்.
இந்து மதம் போதிப்பது சகிப்பு தன்மையையும், பொறுமையும் தான். ஆனால் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. கிருஷ்ணர் பொறுமை பொறுமை என்று இருந்திருந்தால் மகாபாரத யுத்தமே நடந்திருக்காது. கோட்சே செய்தது சரி என்று நாங்கள் எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. கோட்சேவும் தேச பக்தர் என்று தான் கூறினோம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்ப்பதில்லை. ஒரு சிலரை தான் நினைவில் வைத்துள்ளோம். நான் ஒரு இந்து மத சந்நியாசி. இந்து விரோத கருத்துக்கள் வரும்போது அது தொடர்பாக கருத்தை தெரிவிப்பது எனது கடமை.
இந்துவாக இருந்து கொண்டு இந்து விரோதமாக பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக ராமசாமி நாயக்கர் (பெரியார்) இந்து பெயரை வைத்து கொண்டு இந்து விரோதமாக தான் பேசினார். தற்போது மு.க.ஸ்டாலின் மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார். ஆனால் தன் நெற்றியில் இடப்படும் விபூதியை மட்டும் அழிக்கிறார். இவரது குடும்பத்தினர் இந்துவாக இருக்கின்றனர். இதை தான் நாங்கள் சுட்டி காட்டுகிறோம். இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய தேச தலைவர்கள் 2 பேரும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். காந்தி அகிம்சை வழியை கையாண்டார். சுபாஷ் சந்திரபோஷ் ஆயுதம் ஏந்தினார். இதனால் சுபாஷ் சந்திரபோசை தேசவிரோதி என்று சொல்லி விட முடியுமா?. கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்னதால் தான், நான் கோட்சே தேசபக்தர் என்று கூறினேன்.
இந்து மதம் போதிப்பது சகிப்பு தன்மையையும், பொறுமையும் தான். ஆனால் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. கிருஷ்ணர் பொறுமை பொறுமை என்று இருந்திருந்தால் மகாபாரத யுத்தமே நடந்திருக்காது. கோட்சே செய்தது சரி என்று நாங்கள் எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. கோட்சேவும் தேச பக்தர் என்று தான் கூறினோம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்ப்பதில்லை. ஒரு சிலரை தான் நினைவில் வைத்துள்ளோம். நான் ஒரு இந்து மத சந்நியாசி. இந்து விரோத கருத்துக்கள் வரும்போது அது தொடர்பாக கருத்தை தெரிவிப்பது எனது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X