search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
    X

    சாத்தான்குளம் அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

    சாத்தான்குளம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமசந்திரன் (30). அதே பகுதியை சேர்ந்த அந்தோனி முத்து மகன்கள் கண்ணன், விஜய், உறவினர் அந்தோனி ராஜ் மகன் வல்லரசு. ராமசந்திரன்- கண்ணன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வப்போது ஜாடையாக பேசி ராமசந்திரனை வம்புக்கு இழுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் அதே பகுதியை ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணன், விஜய், வல்லரசு ஆகியோர் சேர்ந்து ராமசந்திரனை அவதூறாக பேசினர்.

    இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கம்பால் அடித்து ராமசந்திரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை அறிந்த ராமசந்திரனின் தாய் மூவரையும் தட்டி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராமசந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தோணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×