search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கலைவாணி மற்றும் ராஜேஷ்
    X
    கைதான கலைவாணி மற்றும் ராஜேஷ்

    மனைவியை கொலை செய்த ராணுவ வீரர், கள்ளக்காதலியுடன் கைது

    குருபரப்பள்ளி அருகே மனைவியை கொலை செய்து தலைமறைவான ராணுவ வீரர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (வயது 29). இவர்களுக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

    கடந்த வாரம் கவுதமி வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அழுத்தியதில், ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் கிடந்தது.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த கவுதமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த அவரது கணவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் அவர்தான் கொலை செய்து இருப்பார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். கள்ளக்காதலுக்கு இடையூறாக மனைவி இருந்ததால் அவரை கொன்றது தெரியவந்தது.

    ராஜேசின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

    கர்நாடக மாநிலம் தும்கூரு சதாசிவ நகர், 3-வது கிராஸ் பகுதியில் கள்ளக்காதலி வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் அவருடைய கள்ளக்காதலி கலைவாணி (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். கலைவாணி சேலம் பெண்கள் சிறையிலும், ராஜேஷ் சேலம் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    கொலை செய்யப்பட்ட கவுதமியின் கணவரான ராணுவ வீரர் ராஜேசுக்கும், கர்நாடக மாநிலம் தும்கூரு சதாசிவ நகர், 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. கலைவாணி தனது கணவர் சசிகுமாரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    ஊருக்கு வந்த ராஜேஷ் தனது மனைவி கவுதமியை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவரின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை கொன்றுவிட்டு கள்ளக்காதலி வசிக்கும் ஊரில் சென்று பதுங்கி தலைமறைவானது தெரியவந்தது. ஆனால் போலீசார் துப்பு துலக்கி 2 பேரையும் கைது செய்து விட்டனர்.

    ராஜேஷ் கைதானது குறித்து ராஜஸ்தானில் உள்ள ராணுவ மையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×