என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசி அருகே பைக்கில் தவறி விழுந்த திமுக பிரமுகர் பலி
Byமாலை மலர்27 March 2019 11:55 AM GMT (Updated: 27 March 2019 11:55 AM GMT)
வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த திமுக பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மழையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் ( வயது 68) மாவட்ட முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் நிலையம் அதே கிராமத்தில் உள்ளது.
கடந்த 17-ந் தேதி மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட இடது புறமாக பைக்கை திருப்பினார்.
அப்போது சாலையோர கல்லில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
வந்தவாசி அடுத்த மழையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் ( வயது 68) மாவட்ட முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் நிலையம் அதே கிராமத்தில் உள்ளது.
கடந்த 17-ந் தேதி மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட இடது புறமாக பைக்கை திருப்பினார்.
அப்போது சாலையோர கல்லில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X