search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாசில்தார் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும்-  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    தாசில்தார் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும்- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHighCourt #VigilanceRaid
    சென்னை:

    லஞ்சம் பெற்றதால் கலெக்டரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டாட்சியர் தர்மராஜ், பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புற்றுநோய் போல் ஊழல் பரவி உள்ளதாக வேதனை தெரிவித்ததுடன், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    “லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்த வேண்டும்.  தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது. லஞ்சம் தொடர்பாக அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.

    பின்னர், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தர்மராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHighCourt #VigilanceRaid

    Next Story
    ×