என் மலர்
செய்திகள்

அசோக் நகரில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
அசோக் நகரில் பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோடம்பாக்கம் காமராஜர் சாலை 2வது தெருவைச் சேர்ந்தவர் மரிய லூகாஸ். இவரது மனைவி அருள்மேரி. இவர் அசோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார் .
இன்று காலை அருள் மேரி வேலைக்கு செல்ல அம்பேத்கர் சாலை, ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர் அருள்மேரியின் செல்போனை பறித்து தப்பி சென்றார்.
இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






