search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்
    X

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    திருபுவனை:

    விழுப்புரம் அருகே வளவனூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது48) திருமணமாகாத இவர் கடந்த  6 மாதங்களாக திருபுவனையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

     நேற்று ரஞ்சித்குமார் திருபுவனையில் தங்கி இருந்த வீட்டில் மர்மமான முறையில்  இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் வழக்குபதிவு செய்து அதிக குடிபோதையில் ரஞ்சித்குமார் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×