என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் வாலிபர் குத்திக்கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்27 Feb 2019 4:51 PM GMT (Updated: 27 Feb 2019 4:51 PM GMT)
தர்மபுரியில் வாலிபர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சேகர் மகன் பிரதீப் (வயது 24). டிப்ளமோ படித்துள்ளார். சம்பவத்தன்று இரவு பிரதீப் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் சிலருடன் பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்தார். பிரதீப்பிற்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப் கத்தியால் குத்தப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார்.
இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரதீப் கொலை தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார், பிரபாகரன் (25), உதயகுமார் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X