என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது
கும்பகோணம்:
கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் நேற்று இரவு சைக்கிளில் மடத்து தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது சைக்கிள் பழுதாகி விட்டது. அதனை அவர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த ராமையா மகன் மண்டை செல்வம் மற்றும் சங்கர் என்பவரது மகன் தினேஷ் ஆகியோர் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர்.
கோவிந்தராஜ் பணம் கொடுக்க மறுத்ததால் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.
இதனை பார்த்த ஜாபர் சாதிக் என்பவர் தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரையும் கத்தியால் தாக்கி அவரது செல்போனையும் பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை செல்வம் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்