search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், ‘கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் இதற்கு காரணம். தற்போது, சின்னதம்பி என்ற யானை ஊருக்குள் புகுந்து, காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறது.

    எனவே இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூட வேண்டும். சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ChinnathambiElephant #HC
    Next Story
    ×