என் மலர்
செய்திகள்

சிவகிரி அருகே கார் மோதி முதியவர் பலி
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகிரி:
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொள்ளம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). கூலி தொழிலாளி. நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் சிவகிரி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டையை சேர்ந்த டாக்டர் பாலாஜி(24) ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் குருசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே குருசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொள்ளம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). கூலி தொழிலாளி. நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் சிவகிரி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டையை சேர்ந்த டாக்டர் பாலாஜி(24) ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் குருசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே குருசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story