search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறில் புதிய நிழற்குடை- அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்
    X

    கயத்தாறில் புதிய நிழற்குடை- அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்

    கயத்தாறில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகா குப்பனாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த சொக்கலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்து பேசியதாவது:-

    கயத்தாறு தாலுகா பகுதியில் 162 கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விரைவில் கூட்டு குடிநீர்திட்டம் அமைக்கப்பட உள்ளது. கடம்பூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பெரிய ராட்சத நீர்த்தேக்க தொட்டியும் அமையும். இதன் மூலம் இப்பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். 

    இவ்வாறு அமைச்சர் பேசினார். 

     நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், நெல்லை ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பழனிவேல்ராஜன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, நகர செயலாளர் வாசமுத்து, ஊராட்சி செயலர் சண்முகராஜ், கோவில்பட்டி ஆர்.டி.ஒ. விஜயா, முன்னாள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் செல்லத்துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×