என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரவாயல்-தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது
போரூர்:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் கடந்த 23-ந்தேதி இரவு துபாய் செல்லும் நண்பரை வழியனுப்ப சென்னை வந்தார்.
இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தி 2 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் அதே பகுதி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, அவர்களது மற்றொரு நண்பர் ஆகியோர் சேர்ந்து ஜெகதீஸ்வரனை கத்தியால் குத்தி செயினை பறித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கார்த்திக் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனாம்பேட்டையில் கஜேந்திரன், சங்கரன், கந்தசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நந்தனத்தை சேர்ந்த குள்ளுபிரதீப், நிர்மல், கண்ணகிநகர் சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்