search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
    X

    பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி

    பேராவூரணியில் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பேராவூரணி:

    பேராவூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்ற போது அவரை மீண்டும் பணி செய்யும்படி மேல் அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தனது வீடு புயலால் சேதம் அடைந்துள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகளை பார்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள் மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை கண்டக்டர் கோவிந்தன் தடுத்து காப்பாற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் பேராவூரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×