search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி நகைகளை வைத்து ரூ.4.67 கோடி மோசடி - 5 பேர் சிறையில் அடைப்பு
    X

    போலி நகைகளை வைத்து ரூ.4.67 கோடி மோசடி - 5 பேர் சிறையில் அடைப்பு

    ஓமலூர் அருகே ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்தது குறித்து கைதான கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    காடையாம்பட்டி:

    ஓமலூர் அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இந்த சங்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாகவும், விவசாயிகள் கொடுத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 67 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கடன் சங்க செயலாளர் பழனிசாமி (56), உதவி செயலாளர் பெரியசாமி (54), காசாளர் ரகுமணி (52), நகை மதிப்பீட்டாளர் சேட்டு (53), உதவியாளர் பெரியதம்பி (50) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சேலம் வணிக குற்ற புலனாய்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×