search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை அருகே சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது- ரூ.1 லட்சம் பஞ்சு நாசம்
    X

    அருப்புக்கோட்டை அருகே சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது- ரூ.1 லட்சம் பஞ்சு நாசம்

    அருப்புக்கோட்டை அருகே எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப் பட்டியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 55), விவசாயி. இவர் அங்குள்ள காட்டுக் கொட்டாயில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் மனைவி சங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டரால் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×