search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கடை ஊழியரை வெட்டி ரூ. 70 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
    X

    செல்போன் கடை ஊழியரை வெட்டி ரூ. 70 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    ராயபுரம் அருகே செல்போன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.70 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரஷீத்கான். செல்போன் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் வசூலான பணம் ரூ. 70 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏழுகிணறு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் ரஷீத்கானை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூ. 70 லட்சத்தை பறித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9½ லட்சத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சவுகார்பேட்டையை சேர்ந்த முத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×