என் மலர்
செய்திகள்

தலைமை ஆசிரியையை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையை தாக்கி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
Next Story






