என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்குபாளையத்தில் 830 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்20 Nov 2018 6:01 PM GMT (Updated: 20 Nov 2018 6:01 PM GMT)
தெலுங்குபாளையத்தில் உள்ள குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை:
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கோவையில் குடோன்களில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து குடோன்களில் சோதனை நடத்தி புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை மேற்பார்வையில், தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் உள்ள கோவிந்தசிங் என்பவரது குடோனில் நேற்று சோதனை நடைபெற்றது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவிந்தசிங் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை பொன்னையராஜபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தி 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கோவையில் குடோன்களில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து குடோன்களில் சோதனை நடத்தி புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை மேற்பார்வையில், தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் உள்ள கோவிந்தசிங் என்பவரது குடோனில் நேற்று சோதனை நடைபெற்றது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவிந்தசிங் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை பொன்னையராஜபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தி 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X