என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகா
    X
    மல்லிகா

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக பலியானார்.
    ஆண்டிப்பட்டி:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கிராமப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆண்டிப்பட்டி மற்றும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி கீழஓடைத் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி மல்லிகா. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்த மல்லிகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மல்லிகாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் என கூறியதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் மர்ம காய்ச்சல் பரவுகின்றது.

    எனவே சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×