என் மலர்
செய்திகள்

செங்கோட்டை அருகே அரசு பஸ் டிரைவருக்கு சரமாரி அடி-உதை: ஆட்டோ டிரைவர் கைது
செங்கோட்டை அருகே ஆட்டோவில் ஏற வந்த பயணிகள் பஸ்சில் ஏறிய தகராறில் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.
இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






