search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் எஸ்.பி. ஆபீசில் இளம்பெண் காதலனுடன் தஞ்சம்
    X

    வேலூர் எஸ்.பி. ஆபீசில் இளம்பெண் காதலனுடன் தஞ்சம்

    காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதரிப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேமண்ணா இவரது மகள் பிரியங்கா (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. லத்தேரி காளாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார். (29) என்ஜினீயர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தள்ளனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இருவரின் காதலுக்கு கடும் எதரிப்பு தெரிவித்து வந்தனர்.

    மேலும் பிரியங்காவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து காதல்ஜோடி இருவரும் கடந்த வாரம் வீட்டை வீட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடி இன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

    அதில் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனவே அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    மனுவை பெற்ற போலீசார் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×