என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
48 மணிநேரத்தில் வங்க கடலில் காற்றழுத்தம் உருவாகிறது- இந்திய வானிலை மையம்
Byமாலை மலர்27 Oct 2018 7:40 AM GMT (Updated: 27 Oct 2018 7:40 AM GMT)
அடுத்த 48 மணிநேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndianMeteorologicalCenter
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் நிலையில் தற்போது மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை காணப்படுகிறது.
இது அடுத்த 48 மணிநேரத்தில் 29-ந்தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி அதையொட்டியுள்ள பகுதிகளில் பரவி தமிழக கடலோரம் வரை பரவியுள்ளது.
இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை என்பதால் இன்னும் 4 நாளில் பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. பாம்பன், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndianMeteorologicalCenter
வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் நிலையில் தற்போது மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை காணப்படுகிறது.
இது அடுத்த 48 மணிநேரத்தில் 29-ந்தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி அதையொட்டியுள்ள பகுதிகளில் பரவி தமிழக கடலோரம் வரை பரவியுள்ளது.
இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை என்பதால் இன்னும் 4 நாளில் பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. பாம்பன், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndianMeteorologicalCenter
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X