search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தியை காட்டி செல்போன் பறிப்பு- வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
    X

    கத்தியை காட்டி செல்போன் பறிப்பு- வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது

    கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    நெற்குன்றம் கிருஷ்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மேட்டுக்குப்பம் கடும்பாடி அம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திணேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். தினேஷ் அளித்த மோட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் பைக்கில் வந்த இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம், மதுரவாயலை சேர்ந்த மணிகண்டன் என்பதும் கோடம்பாக்கத்தில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்ததும் கோயம்பேட்டில் பானிபூரி வியாபாரியிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, 2செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    Next Story
    ×