என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26,000 கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்27 Sep 2018 5:08 AM GMT (Updated: 27 Sep 2018 5:08 AM GMT)
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal
ஒகேனக்கல்:
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.
நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது.
தற்போது தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை முழ்கடித்து தண்ணீர் சென்றது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நீர்வரத்து அதிகரித்ததால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் 95-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.
நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது.
தற்போது தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை முழ்கடித்து தண்ணீர் சென்றது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நீர்வரத்து அதிகரித்ததால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் 95-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X